அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் வார்டு 5 கொத்தங்குடிதோப்பு பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் 5வது வார்டு உறுப்பினருமான க.பழனி அவர்கள் தலைமை தாங்கினார், பகுதி சபா உறுப்பினர்கள் மாரிமுத்து, பழனிவேல், காயத்ரி, ஆகியோர் மற்றும் செயல் அலுவலர் பாலமுருகன் இளநிலை உதவியாளர் பாஸ்கரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள்,வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது.
No comments:
Post a Comment