கடலூர் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரின்தந்தை நினைவுநாள். 1000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 28 November 2022

கடலூர் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரின்தந்தை நினைவுநாள். 1000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கடலூர் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரின்தந்தை நினைவுநாள். 1000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியவர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கே.பி.தெய்வசாமி.இவர் இப்பகுதியின் பெரும் நிலக்கிழார் மற்றும் பெரும் தொழிலதிபரும், சேத்தியாத்தோப்பின் அதிமுக முன்னாள் நகரச் செயலாளரும் ஆவார் இவரின் 14-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பில் உள்ள கேபிடி திருமணமகால் வளாகத்தில்நடைபெற்றது.



முன்னதாக சேத்தியாத்தோப்பு சந்தைதோப்பில் உள்ள வாய்மூடி சித்தர்கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதன்பின் அருகிலுள்ள கே.பி,தெய்வசாமியின் நினைவிடத்தில் சிறப்புவழிபாடுகள், பூஜைகள், மலர்தூவுதல் நடைபெற்றது. முன்னாள்பாஜக கடலூர் மேற்குமாவட்டத் தலைவரும், சேத்தியாத்தோப்பு முன்னாள்பேரூராடசி மன்றத் தலைவர்  கேபிடி இளஞ்செழியன்  மலர்மாலை அணிவித்து மரியாதை செய்து தீபமேற்றி வழிபாடு செய்தார்.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சியின் தலைவர்பட்டுகணேசன், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அதிமுக1-வது வார்டு கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், கே.டி விஜயராஜன், சதீஷ், எஸ்டி. கருணாநிதி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று பெரியவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.



நிறைவாக கேபிடி திருமணமகால் வளாகத்தில் உள்ள கேபிதெய்வசாமி திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஏழை எளியவர்கள், பொதுமக்கள் என சுமார் ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment