கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி தினிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதில் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர் விருத்தாசலம் ஒன்றிய தலைவர் தோழர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில் வட்ட பொருளாளர் முருகவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார், வசந்த், தனவேல் மாவட்ட தலைவர் சின்ன தம்பி மு, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், SFI மாவட்டத் தலைவர் சிவானந்த் ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம் பெசு.வீரா, கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் அஜித், மு, வட்ட செயலாளர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment