கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் தந்தையை இன்று பெரியநெசலூரில உள்ள அவர்களின் இல்லத்தில் உழைக்கும் பெண்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் தோழியர் வகிதா நிஜாம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.துரை, மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு ஆர். சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் எம். நிதிஉலகநாதன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.பி முருகையன், ஞானசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ஆர். தேவா, நல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.கடவுள் (எ)கோவிந்தராசு, எஸ். ரமேஷ், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வளர்மதி, கடலூர் மாவட்ட தலைவர் அறிவழகி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ரீட்டா, டாக்டர் சாந்தி,வழக்கறிஞர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள்.
மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு 1-8-2022 அன்று வேப்பூரில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment