வடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் SC/ST பொறுப்பாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 June 2022

வடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் SC/ST பொறுப்பாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டம்


வடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் SC/ST பொறுப்பாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் வடலூரில் தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்டம் SC/ST அலுவலர் நலச்சங்கத்தின் மாவட்ட பொருப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் பேராசிரியர் அ. பிராபகரன் தலைமையில்   நடைபெற்றது இதில் மாவட்ட செயலர் இரா. ஞான சேகரன் முன்னிலை வகித்தார் 


இதில் மாவட்ட பொருளாளர் கு. அருண்குமார் வரவேற்புரை வழங்கினார், மாவட்ட பொருப்பாளர்களான  அறிவொளி ,கலிய மூர்த்தி, பாஸ்கர், ராஜவிஸ்வநாதன் மற்றும் வட்ட நிர்வாகிகளான பிராபாகரன், தயாநிதி ஆகியோர்கள் கருத்துரை வழங்கினார்கள்.


மேலும் மாநில துணை தலைவர் ரெ. ரெங்கராஜன் மற்றும் மத்திய மாநில கூட்டமைப்பு SC/ST மாநில துணை தலைவர்  புகழேந்தி, மாநில இணை செயலாளர் இராம.ஆனந்த்  அவர்கள் சிறப்புரையாற்றினர், மேலும் கூட்டம் முடிவில் குறிஞ்சிப்பாடி வட்ட தலைவர் கஜேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்

No comments:

Post a Comment

*/