கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலக மெயின் கேட் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் எடுத்து கூறியும் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலடச்சியம் காட்டியுள்ளனர்.
அதே பகுதியை நல்லூரைச் சேர்ந்த வேலன் கௌரி தம்பதியின் மகன் தமிழ்இசை வயது 8 இவர் நண்பர்களுடன் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது கேட் கதவூ தமிழ்இசையின் மேல் விழுந்ததில் தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்தது உடனே அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் நிற்காமல் தொடர்ந்து வெளியேறியதால் விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் . கூறப்படுகிறது..
விடுமுறை நாள் என்பதால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிற்கப்படுள்ளதாகவும். உடனடியாக கேட்கத் வினை மாற்றவேண்டும். அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment