கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா.
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா அரசு பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவிற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை ஏற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
கடலூர் மாநகர மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினார். தி ரைசிங் சன் ஆங்கில நாளிதழ் முரசொலி குழுமம் சென்னை முனைவர் ஜே கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் தினக்குரல் மாவட்ட பத்திரிக்கையாளர் தி. இராஜமச்சேந்திர சோழன் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கும் ,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு புதுவை மண்டல மனித உரிமைகள் அமைப்பு தலைவர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை கடலூர் அரசு பெரியார் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர். இந்த ஆண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment