கடலூர் மாவட்டத்தில் 75.00 மி.மீ மழை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

கடலூர் மாவட்டத்தில் 75.00 மி.மீ மழை


மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரா - மசூலிப்பட்டணம் அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காலை 8.30 மணியளவில் மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக வலுவிழக்கக் கூடும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு மற்றும் பகல் நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் வேப்பூர், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.


இருப்பினும் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 75.00 மில்லி மீட்டர் மழை பெய்தது.


மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு

வேப்பூர் 75.00, காட்டுமயிலூர் 70.00, பண்ருட்டி 32.00 லக்கூர் 28.00, SRC குடிதாங்கி 25.00 மாத்தூர் 25.00, கடலூர் ஆட்சியர் அலுவலகம் 20.60, விருதாச்சலம் 20.00, வானமாதேவி 17.00, குப்பநத்தம் 15.20, குறிஞ்சிப்பாடி 12.00, கடலூர் இந்திய வானிலை ஆய்வு 11.20, தொழுதூர் 10.00, கீழ் செருவாய் 9.00, சேத்தியாத்தோப்பு 6.00, வடக்குத்து 6.00, கொத்தவச்சேரி 5.00, சிதம்பரம் 2.80, பெலாந்துறை 2.40, புவனகிரி 2.00, அண்ணாமலை நகர் 2.00, பரங்கிப்பேட்டை 1.20 


No comments:

Post a Comment

*/