கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் 29 வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது சிறப்புமுகாமை வட்டார மருத்துவர் எம்.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 3746 சிறப்பு முகாம்கள் காலை0.7.00 மணிமுதல் மாலை 0.7.00 மணி வரையில் நடைபெற்று வந்தது.
இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடப்பட்டது 12 வயது முதல் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கார்போவேக்சின் தடுப்பூசியும் என சுமார் மாவட்டம் முழுவதும் 75,000 நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு நடைபெற்று வருகிறது .
கொரோனா நான்காவது அலை டெல்லி கேரளா போன்ற மாநிலங்களில்கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் நாம் அனைவரும் கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்மைபொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்மேலும் சிறப்பு முகாமில வட்டார நடமாடும் மருத்துவர் டாக்டர் ஜெயலஷ்மி கிராம சுகாதார செவிலியர் மரிய ஆரோக்கியஷீலா அங்கன்வாடி அமைப்பாளர் கீதா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்குசிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர்.

No comments:
Post a Comment