சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வடலூர் நகர விசிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கடலூர் மாவட்டம், வடலூரில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு வடலூர் நகர விசிக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விசிக வடலூர் நகரச் செயலாளர் தங்க. ஜோதிமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் வடலூர் நகர விசிக நிர்வாகிகள் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அன்னல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர் ; தே. தனுஷ்.

No comments:
Post a Comment