கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கிள்ளை பேரூராட்சி மன்றத்தின் சார்பில் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்
அப்போது, மானம்பாடி, சிங்காரகுப்பம் கிராமத்திற்கு பட்டா இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் கிள்ளை பேரூராட்சிக்கு முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பு திட்டமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 90 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு குடிணசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்பு கட்டிக் கொடுப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதல்படி செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
செய்தியாளர்; பாலாஜி
No comments:
Post a Comment