நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2023

நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி இரவு நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக ஆகஸ்ட் மாதமே அவரது பிரியாணி கடையில் எழில் மற்றும் விக்கி என்ற இரண்டு பேர் கத்தியை வைத்து அவரை கொல்ல முயற்சி செய்திருந்த நிலையில் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் புகார் அளித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் கடந்த சில வருடங்களாக தெர்மல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாகவும் இதனால் தெர்மல் காவல் நிலையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் லதாவை பணியிட நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி ஜியாஉல்ஹக் உத்தரவு.

No comments:

Post a Comment

*/