கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் அடுத்துள்ள வட்டத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொலை்யாதகண்டம் என்ற கிராமத்தில் வியாகுல மேரி என்பவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது அருகில் இருந்தவர்கள் சேத்தியாத்தோப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தீ மளமளவென சரியத் தொடங்கியது.
தீயணைப்பு வண்டி வருவதற்குள் தீ முற்றிலும் எரிந்து சாம்பலானது மேலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும் இருந்தபோதிலும் தீயணைப்பு வண்டி வந்து மேலும் தீ பரவாமல் இருக்க முற்றிலும் அணைத்தனர் மேலும் தீ எவ்வாறு பிடித்தது என்பதுகுறித்து சோழத்தரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா விசாரணை செய்து வருகிறார்கள் தகவலறிந்த வடகிழக்கு அதிமுக கிளை செயலாளர் செல்வகுமார் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்
செய்தி:கே, பாலமுருகன்

No comments:
Post a Comment