கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் தொழுதூர், இடைச்செருவாய், கோழியூர், ஆவினங்குடி, எறையூர் ஆகிய இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வலியுறுத்தி ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (AITUC) சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்க தலைவர் வேடப்பன் தலைமையில் நடைபெற்றது.
எம்.ராஜேந்திரன், பி.செல்வக்குமார், எல்.நடராஜன், எஸ்.கண்ணதாசன், எம்.ராஜேந்திரன், பி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன்,வட்ட செயலாளர் வி.பி.முருகையன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் எம். நிதிஉலகநாதன்,மாவட்ட குழு உறுப்பினர் கடவுள் (எ)கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment