JNU மாணவர் தாக்குதலை கண்டித்து சிதம்பரம் நகர் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP குண்டர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,ABVP குண்டர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும்,
பாசிசத்திற்கு எதிராக கல்வியில் காவிமயம் விரிப்பை கண்டித்தும், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிஷோர், மணி, நிர்வாகிகள் அருண் சோலை, மாதவன், ஆகாஷ், வெள்ளி ராஜ், வேல் சூர்யா, ஆதி, மனோஜ், ஹரிஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; ஜெகதீசன்.


No comments:
Post a Comment