கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் தனுசு மகன் நந்தகுமார் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21.8.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரிடம், சாப்பாடு கேட்டுள்ளார். உடனே அந்த சிறுமி வீட்டுக்குள் சென்று தனது தாயிடம் கேட்டு, நந்தகுமாருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அதனை வாங்கிய நந்தகுமார், சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதுபற்றி சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சமூக பாதுகாப்பு துறையின் சமூகநல நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவகாமி ஆஜராகி வாதாடினார்.
No comments:
Post a Comment