கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 7-ந்தேதி முதல் பொதுமக்கள்‌ குறைதீர் கூட்டம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 March 2022

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 7-ந்தேதி முதல் பொதுமக்கள்‌ குறைதீர் கூட்டம்!!!


கடலூர்‌ மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கையின்‌ கீழ்‌ பொதுமக்களிடம்‌ நோய்‌ பரவாமலும்‌, அவர்களின்‌ நலன்‌ கருதியும்‌ மாவட்ட ஆட்சியர்‌அலுவலகத்தில்‌ பிரதி வாரம்‌ திங்கள்‌ கிழமை தோறும்‌, புகார்‌ பெட்டி மூலம்‌ பொதுமக்களிடம்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு, நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்சமயம்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவல்‌ குறைந்து உள்ளதால்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌, மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 07.03.2022 முதல்‌ பிரதி வாரம்‌ திங்கட்கிழமை தோறும்‌ பொது மக்கள்‌ குறைதீர்வு கூட்டம்‌ நடைபெற உள்ளது.

ஆகவே, 07.03.2022 அன்று நடைபெற உள்ள பொதுமக்கள்‌ குறைதீர்வு கூட்டத்தில்‌ பொது மக்கள்‌ அனைவரும்‌ தங்களின்‌ குறைகளை மாவட்ட ஆட்சியரிடம்‌ நேரடியாக மனு செய்துகுறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ வாராந்திர பொதுமக்கள்‌ கூட்டத்திற்கு வருகை தரும்‌ பொதுமக்கள்‌ புதிய இணையதள பதிவு (CM HELPLINE/MUDHALVAN MUGAVARI ) நடைமுறையின்‌ படி தங்களது மனுவில்‌ ஆதார்‌அட்டை எண்‌, செல்லிடை பேசி எனர்‌ மற்றும்‌ குடும்ப அட்டை எனணர்‌(smart card) ஆகியவற்றை மனுவில்‌ தவறாமல்‌ பதிவு செய்து மனு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

 மேலும்‌ பொது மக்கள்‌ அனைவரும்‌ கொரோனா வைரஸ்‌ பரவல்‌ தடுப்பு வழிகாட்டுதலின்‌ படி சமூக இடைவெளியை பின்பற்றியும்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌ கூட்டத்திற்கு வரவேண்டும்‌ எனவும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கி.பாலசுப்ரமணியம்‌. இஆப.அவர்கள்‌ தெரிவித்தார்


No comments:

Post a Comment

*/