கீழே கிடந்த பர்ஸை போலீசாரிடம் ஒப்படடைத்த இளைஞர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 October 2022

கீழே கிடந்த பர்ஸை போலீசாரிடம் ஒப்படடைத்த இளைஞர்.

கடலூர்  காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் முதுநகர் மணிகூண்டு அருகே வரும்போது கீழே கிடந்த மணிபரசை கண்டெடுத்தார்  கீழே கிடந்த மணிபர்சை கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த மணிபர்சில் 1 பவுன் செயின் ஒன்று, 1/2 பவுன் மோதிரம் மற்றும் கைபேசி ஆகியவை இருந்தன. 


கடலூர் முதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜாங்கம்  விசாரணை மேற்கொண்டதில் மணிபர்சை தொலைத்தவர் பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்த செல்வநாயகி வயது 50 க/பெ முத்தையன் என்பவரது என்பது தெரியவந்ததின் பேரில் மேற்படி செல்வநாயகி அவர்களிடம் நகையை எடுத்து கொடுத்த பாலச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. பாலச்சந்திரனின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டினார்கள். 

No comments:

Post a Comment