பெரியார் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 14 October 2022

பெரியார் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர்கள் அகஸ்டின், ஆறாவமுது, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக கடலூர் மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பெரியார் அரசு கல்லூரி முதல்வர் திரு ஜோதி வெங்கடேஸ்வரன், பேராசிரியர்கள் நிர்மல் குமார், இளவரசன், விடுதி காப்பாளர் தட்சனா, விடுதி பணியாளர் உமாபதி, திமுக நிர்வாகிகள் பாலாஜி கார்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ராஜதுரை, சொந்தில், ராமநாதன், காட்டு ராஜா, ராஜ்குமார், வெற்றிவேந்தன், மார்க் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.  

No comments:

Post a Comment