முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திருவுருவ சிலை அமைக்க கடலூர் துறைமுகம் தூயதாவீது மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சருக்கு கடிதம்.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 91வது பிறந்தநாளில் தமிழை உலக அரங்கில் தலைநிமிர வைத்த ஐயன் திருவள்ளுவருக்கு கன்னியாக்குமரியில் சிலை அமைத்தது போல் தமிழரை உலகளவில் தலைநிமிர வைத்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு இராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே திருவுருவசிலை அமைக்க கடலூர் துறைமுகம் தூயதாவீது மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தலைமைஆசிரியர் என்.கங்காதேவி தலைமையில் மாணவ மாணவிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்கள்.
தமிழ் ஆசிரியர் ஜெபராஜ், லோகநாதன், ஆனந்தராஜ், ஜெஸ்டின், ஜெபஸ்டின், சாமுவேல் செல்லதுரை, வில்சன் மற்றும் பி.எட் பயிற்சி ஆசிரியர்கள் ஆர்வமாக கடிதம் எழுதுவதற்கு மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளித்தனர்
No comments:
Post a Comment