சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து கடலூரில் அ.இ.அ.தி.மு.க வினர் கடலூர் சீமாட்டி சிக்னல் அருகே சாலையில் அமர்ந்து்மறியலில் ஈடுப்பட்டனர் உடனடியாக காவல்துறையினர் கலைந்து செல்ல கூறினர் மீண்டும் மறியலில் ஈடுப்பட்டதால் மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர், மறியலில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், ஒன்றியசெயலாளர் காசிநாதன், மாநில மீனவர் அமைப்பு கே.என்.தங்கமணி, ஆர்.வி. ஆறுமுகம், ஒன்றியக்குழுத் லைவர் தெய்வ.பக்கிரி, முதுநகர் பகுதி செயலாளர் வீ.கந்தன், மஞ்சக்குப்பம் வெங்கட்ராமன், திருப்பாதிரிப்புலியூர் கெமிக்கல் மாதவன், ஒன்றியக் கவுன்சிலர் வேல்முருன் மாமன்ற உறுப்பினர் ஏ.ஜி.தஷ்னா, ஏழுமலை, பரதீப் மற்றும் ஏராளமான அ.தி.மு.கவினர் ஈடுப்பட்டனர், சாலைமறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
No comments:
Post a Comment