இந்நிகழ்வின் போது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். 2022-2023ம் ஆண்டில் கதர்கிராம தொழில் வாரியத்தின் வாயிலாக இம்மாவட்டத்திற்கு ரூ.155.00 இலட்சம் விற்பனைக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இக்குறியீட்டை எய்துவதற்கு இம்மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, ஆகிய காதிகிராப்ட்டுகளில் விற்பனை நடைபெற்றுவருகிறது.
மேலும் இச்சிறப்பு விற்பனையை ஊக்கப்படுத்திடும் விதமாக 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும் பொது மக்களும் கதராடைகளை வாங்கி தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,மாமன்ற உறுப்பினர்கள் ஐ.பார்வதி,சுதா அரங்கநாதன்,செந்தில்குமாரி இளந்திரையன் த.சங்கீதா,த.வ.க அருள்பாபு,ப.ஜ.க சக்திவேல் மாவட்ட மாணவரணி கே.எஸ். ஆர்.பாலாஜி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment