வடலூர் நகராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 October 2022

வடலூர் நகராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் பணியாற்றி வரும்  தூய்மை பணியாளர்களுக்கு  மழைநீர் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டது  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளரும் பொறியாளர் வி.சிவக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடலூர்  நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார்  நகர மன்ற துணைத் தலைவர்  சுப்புராயுலு அவர்கள் மற்றும் திமுக நகர கழக செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான தன.தமிழ்செல்வன் நகரமன்ற உறுப்பினர் சாகுல்அமீது முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வருகின்ற மழைக்காலங்களை எதிர்கொள்ளும் விதமாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

No comments:

Post a Comment