கடலூர் தேவணாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இரண்டாம் நாளாக கருப்பு பேட்ச் அணிந்து கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் அரசாணை எண் 36 பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றி எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் சட்டக் கல்லூரியில் வழங்குவது போல் ரூபாய் 30,000 வழங்க வேண்டும் மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த கூற வேண்டும் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டி நேற்றும் இன்றும் கல்லூரி நுழைவுவாயில் முழக்க போராட்டம் கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் எதிரில் அனைத்து துறை சார்பில் கௌரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கோரிக்கைமுழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
No comments:
Post a Comment