கடலூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துனையினர் அதிரடி சோதனையில் ஈடுப்படும் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை பிடித்து கைது செய்ய வேண்டுமென கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள் சி. சக்திகணேசன் உத்தரவின் பேரில் இன்று மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வன்னியர்ப்பாளையம் சீனுவாசன் வயது 45 த/பெ சுந்தரம், பாதிரிக்குப்பம் கிருஷ்ணா நகர் சுரேஷ் வயது 27 த/பெ முருகன், கம்மியம்பேட்டை ஜெ.ஜெ நகர் கிருஷ்ணமூர்த்தி வயது 50 த/பெ அப்புடு, கேபர்மலை சலங்கை நகர் ராஜ்குமார் வயது 47 த /பெ செல்வராஜ், நெல்லிக்குப்பம் குடிதாங்கிசாவடி மணிகண்டன் வயது 42 த/பெ தேசிங்கு, கொங்கராயனூர் லாலாபேட் பிரகாஷ் வயது 42 த/பெ ஏழுமலை, சிதம்பரம் என்னனகரம் காமட்டி கோவில் தெரு சங்கர் வயது 32 த/பெ செல்வராஜ், விருத்தாச்சலம் ரயில்வே ஜங்ஷன் மெயின் ரோடு ராமலிங்கம் வயது 60 த/பெ ராமசாமி, ஆகிய 8 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment