சிதம்பரத்தில் அதிமுக வின் 51 - ஆண்டு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 October 2022

சிதம்பரத்தில் அதிமுக வின் 51 - ஆண்டு விழா.

அ இ ஆ தி மு க வின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி,  கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக ஒ பிஎஸ் அணி சார்பில் சிதம்பரம் வண்டிகேட்டில்  உள்ள அண்ணா,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட செயலாளர் பாலதுரை பாண்டியன் தலைமையில் பேரணியாக சென்று மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு காட்டுமன்னார்கோயில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மணிகண்டன். முன்னாள் நகரச் செயலாளர் C.S. ராமதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடனமயிலோன், தில்லைவிடங்கன் ஊராட்சி மன்ற தலைவர் கீழச்சாவடி திருமுருகன், கூடலையாத்தூர் ராமச்சந்திரன் புவனகிரி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் கே ஆர் ஜி சாமிநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி கார்த்திகேயன், நகர நிர்வாகி இராமலிங்கம். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பந்தல் குமார் I முத்துக்குமாரசாமி, திலகர், நடராஜன், காட்டுமன்னார்கோயில் பாலகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள்  ராமலிங்கம், முத்து,  காட்டுமன்னார்கோயில் மணிமாறன்.  கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் செண்பகராஜ், பி பாலகிருஷ்ணன், ஆர் கே கனகசபை, வெற்றிச்செல்வன், பாரி, வெங்கடாஜலபதி, மணி, பாரதி, கபில்தேவ்,  மாவட்ட மகளிர் அணி நிர்வாகி மல்லிகா, புவனகிரி சச்சிதானந்தம், கீரப்பாளையம் பாஸ்கரன், சிங்கை பி ஆறுமுகம், வடக்கு சாவடி கங்காசலம், பூதகேணி, ராமலிங்கம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment