கடலூரில் அதிரடி வேட்டையில் சிக்கிய 22 ரவுடிகள் ஆயுதங்கள் பறிமுதல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 October 2022

கடலூரில் அதிரடி வேட்டையில் சிக்கிய 22 ரவுடிகள் ஆயுதங்கள் பறிமுதல்.

தமிழக டி.ஜி.பி  சைலேந்திரபாபு உத்தரவின்படி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சக்திகணேசன் மேற்பார்வையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 8.10.2022, 9.10.2022 ஆகிய இரண்டு நாட்கள் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றவழக்குகளில் இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத தலைமறைவு குற்றவாளிகளை அதிரடி சோதனை மேற்கொண்டதில் 22 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 


பிஸ்டல், ரைபிள், கத்திகள் என 10 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்த 57 தலைமறைவு குற்றவாளிகள் (NBW Accused) பிடித்து நீதிமன்றங்களிள் ஆஜர் செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய 11 குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து நன்னடத்தை உறுதிமொழி பிணைபத்திரம் கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment