மற்ற காட்சிகளை விட பாமக கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி வருகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 September 2022

மற்ற காட்சிகளை விட பாமக கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி வருகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ படங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


தந்தை பெரியாரின் 144- வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவருடைய திருவுருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதனைத்  தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு டாக்டர். ராமதாஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனைத் தொடர்ந்து திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அமைந்துள்ள  தந்தை பெரியார் சிலைக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


இதனைத்தொடர்ந்து, திண்டிவனம் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளின் திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிக்கையா ளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், நாட்டில் அதிகமாக ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருகின்றது  இதனை கண்டித்து எங்கள் கட்சியின் சார்பில் பல போராட்டங்கள் நடத்திய பிறகும் இது நிறுத்தப்படவில்லை. 


இதே போன்று வருமான வரி சோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. சோதனை நடத்துகின்றார்கள் பின்பு ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டு வழக்கு எந்த நிலையில் இருக்கின்றது என்பதுக்கூட தெரியாமல் போய்விடுகின்றது. 


மேலும் அதிமுக உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட  தவறிவிட்டது, மாறாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருவதோடு, மக்களுக்கான கட்சியாக செயல்பட்டு வருகின்றது.


குறிப்பாக அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசிடம் வைக்கின்ற கோரிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவதை விட, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக  மக்களுக்காக தமிழக அரசிடம் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி வைக்கப்படுகிறது. 


விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது தமிழக அரசு அவற்றை நிறைவேற்றியுள்ளது  என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment