அரிசி கோதுமை பருப்பு தயிர் வெள்ளம் மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஒன்றிய மோடி அரசு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து திட்டக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 29 7 2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திட்டக்குடி வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார் திட்டக்குடி நகர செயலாளர் வரதன் மூத்த தோழர் மகாலிங்கம் மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி ஆர் ரவிச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் எஸ் அசோகன் ஆகியோர்கள் கண்டன உரை ஆற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாடம் நகர செயலாளர் அரவிந்த் மாத சங்க வட்ட செயலாளர் முத்துலட்சுமி விவசாய சங்க வட்டத் தலைவர் வாசுதேவன் வாலிபர் சங்கம் வட்ட தலைவர் வினோத் வட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment