காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா

காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா நடைபெற்றது 


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 14 31 பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் வேணி அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.


சிறப்பு அழைப்பாளராக வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் லூர்துசாமி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.


மேலும்  சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் வட்ட வழங்கல் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பொதுமக்களும் இருந்து மனுக்கள் பெறப்பட்டது தொடர்ந்து வருகிற 21 தேதி  வரை நடைபெறுகிறது


செய்தியாளர்; கே.பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/