இன்று காலை பேரறிவாளன் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வண்ணமாக கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து நகர் பகுதியில் வெடிவெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி (வெற்றி) முழக்கமிட்டு பேருந்துகளில் இனிப்பு வழங்கி அனைத்து கடைக்காரர்களும் வாழ்த்துக்கள் கூறி வடக்குத்து திராவிடர் கழகம் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், வடக்குத்து நகர் பகுதி தலைவர் கண்ணன் செயலாளர் கனகராஜ், பகுதிப் பொறுப்பாளர் பாஸ்கர், தமிழ்மணி, திமுக பொறுப்பாளர்கள் கண்ணு தோப்பு வெங்கடேசன், வடக்குத்து வாசுதேவன், வர்த்தக சங்க பொறுப்பாளர் தலைவர் மணி, செயலாளர் சேகர், செயற்குழு உறுப்பினர் குமரேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு திராவிடன் ஒருங்கிணைத்தார்

No comments:
Post a Comment